Wednesday 18 March 2015

ஸ்பெக்டர் 007 James Bond Film Teaser

டியர் காமிரேட்ஸ்,

நேற்று ஜேம்ஸ் பாண்ட் திரப்படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசர் போஸ்டரில் நடிகர் டேனியல் க்ரைக் ஒரு கருப்பு நிற டர்ட்டில்நெக் டீ ஷர்ட்டை அணிந்துக்கொண்டு கையில் அவருக்கு பிடித்தமான Walther PPK ரக துப்பாக்கியுடன் தோறுகிறார். 

007 Spectre Teaser March 17

இந்த உடை, நடிகர் ரோஜர் மூர் Live & Let Die படத்தின் க்ளைமேக்ஸில் அணிந்து வந்ததைப்போன்றே காணப்படுகிறது.

சென்ற மாதம் ஆஸ்த்திரியாவில் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் அவர்  கையில் Heckler & Koch VP9 ரக துப்பாக்கி இருந்ததை நினைவில் கொள்ளுங்கள்.

007 Spectre Shooting Stills 1

இத்திரைப்படம் எனக்கு பிடித்தமான இயக்குனர் சாம் மெண்டீசின் இயக்கத்தில் வெளியாகும் இரண்டாவது ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமாகும். இதன் முதல் காட்சி படப்பிடிப்பு துவங்கியபோது எடுத்த புகைப்படம் இதோ:

007 Spectre Shooting Stills 2

ஸ்பெக்டர் திரைப்படம் இந்த ஆண்டு நவம்பர் ஆறாம் தேதி வெளியாகிறது. 

காமிக்ஸ் ஹீரோக்கள் 18th March 2015

டியர் காமிரேட்ஸ்,

ஒரு தினசரி நாளிதழின் இணைப்பின் எடிட்டராக இருக்கிறார் அந்த இளைஞர். ஓஅதே பத்திரிக்கையில் வேறு பிரிவை சேர்ந்த ஒருவரின் கதைக்கு, இவர் ஓவியம் வரைந்து காமிக்ஸ் தொடராக வந்துக்கொண்டு இருக்கிறது. ஆனால் அந்த கதை மிகவும் சுமாரான கதை என்று இவர் கூற, பத்திரிக்கையின் எடிட்டர், அப்படியானால் நீயே ஏன் கதையும் எழுதி வரைந்து கொடுக்கக்கூடாது? என்று கேட்க, ஜனவர் 10ஆம் தேதியை காமிக்ஸ் உலகில் என்றென்றும் மறக்க முடியாத அளவுக்கு மாற்றிய ஒரு கதையை அவர் ஆரம்பித்தார்.

The Hindu Logo

  • இந்த கதையின் நாயகன் அவரது சகோதரனையே மாடலாக கொண்டு உருவாக்கப்பட்டவர்.
  • இந்த கதையில் நாயகனுக்கு உதவும் மற்றொரு கதாபாத்திரத்தின் பெயர் அவரது முன்னாள் காதலியின் பெயரே.
  • இந்த கதையில் நகைச்சுவைக்கு சுவையூட்ட வரும் இரட்டை கதாபாத்திரங்கள் இவரது தந்தை மற்றும் சித்தப்பாவை கொண்டு உருவாக்கப்பட்டது.

இப்படியாக குடும்பத்தையே கதையில் கொண்டு வந்த இவரது கதாபாத்திரம் காமிக்ஸ் உலகில் மட்டுமல்ல, ஓவியக்கலையிலும் ஒரு மாற்றத்தை உருவாக்கியது. அதுவரையில் இயங்கி வந்த ஓவிய பாணியையே மாற்றிய இந்த மேதையின் கதைகள் பல சர்ச்சையை உள்ளடக்கியவை.

இவரது ஆரம்ப கால கதைகள் பல நாடுகளில் தடை செய்யப்பட்டவை. சென்ற வாரம்கூட அமெரிக்காவில் மறுபடியும் தடைவிதிக்க கோரி ஒரு சர்ச்சை நடந்தது.

இவரது முதல் கதையில் பல தகவல் பிழைகள் இருந்ததால், அதனை மறுபிரசுரம் செய்யும் உரிமையை யாருக்கும் தராமல் தடை விதித்து இருந்தார். சமீபத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக அந்த கதை மறுபடியும் வெளியானது.

Mayabazaar Logo 2

தி இந்து தமிழ் நாளிதழின் மாயா பஜார் இணைப்பின் காமிக்ஸ் ஹீரோக்கள் பகுதியில் இவ்வார கட்டுரையை படித்து முழுக்கதையையும் தெரிந்து கொள்ளுங்கள்.

நமக்கு எல்லாம் நன்கு பரிச்சயம் ஆன காமிக்ஸ் கதாநாயகர்களை ஒரு மறு அறிமுகம் செய்யும் இப்பகுதியில் இன்று உலகம் ரசிக்கும் ஒரு  இளைஞனைப் பற்றிய சிறு அறிமுகம் வெளியாகியுள்ளது.

Mayabazaar Logo

இந்த பகுதியின் சிறப்பே அட்டகாசமான ப்ரொஃபைல் படங்கள் + கண்ணை கவரும் லேஅவுட் டிசைன் தான்.

ஆகவே, நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் ......

வேறென்ன, தென்னிந்தியாவில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருவனந்தபுரம், பெங்களூரு என்று ஆறு பதிப்புகளை கொண்ட தி இந்து தமிழ் நாளிதழை வாங்கி இந்த கட்டுரையை படிக்கவேண்டியதுதான்.

பின் குறிப்பு: இது யார்  என்று யூகிக்க முடிகிறதா?

க்ளூ 1: இதுவரையில் தமிழில் வெளிவராத இந்த கதை இந்தியில் 2008ஆம் ஆண்டு வெளியானது.

க்ளூ 2: இவரது கதையை பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் திரைப்படமாக எடுத்தார்.

க்ளூ 3: அட, போங்க சார், இதுக்கு மேலே சொன்னால் ரொம்ப சுலபமாகி விடும்.

Saturday 7 March 2015

தமிழின் முதல் கிராபிஃக் நாவல்: குமுதம் தீராநதி மார்ச் 2015

டியர் காமிரேட்ஸ்,

இந்த மார்ச் மாத குமுதம் தீராநதியின் அட்டைப்பட கட்டுரையாக நம்முடைய “தமிழின் முதல் கிராபிஃக் நாவல்” என்ற முயற்சி வெளியாகி உள்ளது. சமகால சித்திரக்கதை வாசிப்பு அனுபவத்திற்கு இந்த கட்டுரை மிகவும் முக்கியமான ஒன்றாக அமையும் என்று கருதுகிறேன்.

Kumudam TheeraNathi March 2015 Cover

இந்த கட்டுரையில்…..

  • சித்திரக்கதை (காமிக்ஸ்) மரபு உருவான வரலாறு
  • உலகின் முதல் சித்திரக்கதை (காமிக்ஸ்)
  • சித்திரக்கதைகளின் அமைப்பு
  • சித்திரக்கதைகளின் பரிணாம வளர்சி
  • சித்திரக்கதைகளுக்கும் (காமிக்ஸ்) கிராபிஃக் நாவலுக்கும் உள்ள வித்தியாசம்
  • உலகின் முதல் கிராபிஃக் நாவல்
  • தமிழில் இதுவரை வெளிவந்துள்ள கிராபிஃக் நாவல்கள்
  • தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட கிராபிஃக் நாவல்களின் விமர்சனம்
  • இந்தியாவில் தற்போது உருவாகிவரும் கிராபிஃக் நாவல்களின் அறிமுகம்
  • சிறந்த இந்திய கிராபிஃக் நாவல் படைப்பாளிகள்

என்று பல உள்ளடக்கங்களை கொண்ட ஒரு கட்டுரையாக உருவெடுத்துள்ளது. இதன் தொடர்ச்சி அடுத்த இதழில் வெளிவரும்.

Kumudam TheeraNathi March 2015 Credits Page

கட்டுரையின் ஒரு பகுதி:

Examples சித்திரக்கதைகளுக்கென்று ஒரு தனி வரையறை உண்டு. அவற்றை இங்கே காண்போம்.

ஒவ்வொரு காமிக்ஸ் கதையும் பேனல்கள் என்று அழைக்கப்படும் கட்டங்களால் உருவாக்கப்பட்டது. இந்த கட்டங்கள், பெரும்பாலும், எல்லைக்கோடுகளால் பிரிக்கப்பட்டு இருக்கும். இந்த பேனல்கள் தொடர்ச்சியான செயலின் ஒரு அங்கமாகும்.

ஒரு கதையை முக்கியமான சிறு சிறு பகுதிகளாக பிரித்து, அந்த சிறு பகுதிகளை ஓவியங்களால் விளக்கி, வார்த்தைகளால் அலங்கரித்து உருவாக்கப்பட்டதே ஒவ்வொரு பேனலும்.

இந்த கட்டங்களை ஒன்று சேர்த்து படிக்கும்போது அவை தொடர்ச்சியாக ஒரு கதையின் இயக்கத்தை விவரிக்கின்றன. இதற்க்காக இரண்டு விதமான கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன:

Caption என்று அழைக்கப்படும் கதையின் இயக்கத்தை விவரிக்கும் வகையில் மூன்றாம் நபரின் பார்வையில் கதாசிரியரால் எழுதப்பட்டு இருக்கும்.

Speech Balloon என்றழைக்கப்படும் வளிக்கூண்டுகள். இவை உரிய கதாபாத்திரங்களின் உரையாடலை விவரிக்கும். இந்த பலூன்களின் முனை யாரை நோக்கி இருக்கிறதோ, அவரது கருத்தாக புரிந்துக்கொள்ளப்பட வேண்டும். இந்த பலூன்களில் மொத்தம் நான்கு வகை உண்டு.

  1. கதாபாத்திரம் வழக்கம் போல, நடைமுறையாக பேசுவது
  2. இரகசியமாக, மெலிதான குரலில் பேசுவது
  3. எண்ணங்களாக மனதில் நினைப்பது
  4. உரக்க பேசுவது / கத்துவது – அலறுவது

இதிலேயே கூட சில வரையரைகள் உண்டு. ஒன்று கதாபாத்திரங்கள் பேசாமல், மூன்றாவது நபர் விவரிப்பின் மூலமாக கதையை சொல்வது. இரண்டாவது முறையில் கதாபாத்திரங்கள் பேச உதவியாக வார்த்தை வளிக்கூண்டுகள் (பேச்சு பலூன்கள்) உருவாக்கப்பட்டு, கதைமாந்தர்கள் பேசுவதைக்கொண்டு கதையை இன்னமும் விளக்கமாக நடைமுறை பாணியில் சொல்வது.

இப்படியாக ஒரு அருமையான வாசிப்பு அனுபவத்தை பெற, உடனடியாக இந்த மாத குமுதம் தீராநதி இதழை வாங்கி பயன்பெறவும்.

தனிப்பிரதி: விலை ரூபாய் 20/-

ஆண்டு சந்தா: விலை ரூபாய் 300/-

ஆண்டு சந்தா (அயல்நாடு): ரூபாய் 800/- அல்லது 20 டாலர்.

சந்தா தொகையை DD / MO மூலம் Kumudam Publications pvt Ltd என்று எடுத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பவும்:

குமுதம் பப்ளிகேஷன்ஸ் பி லிமிடெட்,

பழைய எண் 151, புதிய எண் 306,

புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10.

தொடர்புக்கு: 044-264 22 148

கட்டுரையை முடிக்கும் முன்பாக ஒரு சுவையான செய்தி: சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பிரபல வார இதழில் தமிழின் முதல் சித்திரக்கதையை அவர்கள் தான் வெளியிட்டதாக கூறி, ஒரு குறிப்பிட்ட இதழில் வெளியான கதையை பற்றி வெளியிட்டு இருந்தார்கள்.

ஆனால், அதற்க்கு முன்பாகவே தமிழில் பிரபல வெகுஜன பத்திரிக்கையில் காமிக்ஸ் கதையும், கிராபிஃக் நாவலும் வெளியிடப்பட்டதை இந்த கட்டுரையில் காணலாம்.

என்சாய்.